ஆதவன்.
சீனாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஏவுகணை தொழில் நுட்பங்களை இரகசியமாக வழங்கிய மைக்காக இந்தத் தடையை அமெரிக்கா விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நீண்டதூர ஏவுகணைகளை பாகிஸ்தானுக்கு வழங்கியதாகவும் அந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு சீன நிறுவனங்கள் தொடர்ச்சியாக தொழில்நுட்ப உதவிகளை சட்டங்களுக்கு அப்பாற்பட்டு வழங்கிவருகின்றன என்று தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.
இந்தத் திரைமறைவு நடவடிக்கைகளால் இந்தியா இலக்காக்கப்படலாம் என்ற அச்சம் கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்கா இந்தப் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.