இனியபாரதி.
இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் கடமையில் நின்ற இராணுவத்தினரை காணொளி எடுத்து கிண்டலடித்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலாலி வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைந்த இளைஞரொருவர் இராணுவ முகாமில் கடமையில் நின்ற இராணுவ சிப்பயை காணொளி எடுத்ததோடு “டுப்பு டுப்புனு சுடுறீனங்களா? உண்மையான துவக்கா” என கிண்டலடித்துள்ளார்.
கடமையில் இருக்கும் ஒரு இராணுவத்தினை வீடியோ எடுத்து நக்கலடித்து அதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்தமை தொடர்பில் பலரும் தமது விமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர்.
இவ்வாறு பல யூரிப்பர்ஸ் சட்ட வரையறைகளை மீறி பல இடங்களுக்குள் அத்துமீறி மீறி சட்டவிரோதமாக உள்நுழைவதும், வெளிநாட்டு நிதிகளை சட்டவிரோதமாக கையாளுவதுமாக பாரதூரமான குற்றங்களை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பில் உரியவர்கள் கவனம்எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.