வரலாற்றில் இன்று – 10.05.2024
வரலாற்றில் இன்று – 10.05.2024

(புதியவன்)

மே 10 கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது.
70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார்.
1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்..
1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
1534 – இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார்.
1612 – ஷாஜகான் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தார்.
1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது.
1688 – அயூத்திய இராச்சியத்தின் மன்னர் நாராய் தனது மகள் சுதாவதியை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னரைப் பெரிதும் விமர்சித்து எழுதிய ஜோன் வில்க்ஸ் என்பவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
1773 – வட அமெரிக்க தேயிலை வணிகத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை அளிக்கும் தேயிலை சட்டத்தை பெரிய பிரித்தானியாவின் நாடாளுமன்றம் அமுல்படுத்தியது.
1774 – பதினாறாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1796 – உருசியப்ப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டன.
1796 – பிரான்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆத்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
1824 – லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
1837 – நியூயார்க் நகர வங்கிகள் செயலிழந்தன, வேலைவாய்ப்பின்மை பெருமளவில் அதிகரித்தது.
1849 – நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர்.
1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டார்.
1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையிலான போர் பிரான்சு சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.
1877 – உருமேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
1922 – கிங்மன் பாறையை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் செருமனி ஊடுருவியது.
1940 – நெவில் சேம்பர்லேன் பதவி துறந்ததை அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐசுலாந்தினுள் ஊடுருவியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனிய வான்படையின் தாக்குதலில் லண்டனில் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.
1946 – சவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
1946 – அமெரிக்கா முதல்தடவையாக வி-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.
1960 – அமெரிக்காவின் டிரைட்டன் புவியை கடலடியாக சுற்றி வந்த முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் என்ற சாதனையைப் பெற்றது.
1975 – சோனி நிறுவனம் பீட்டாமாக்சு என்ற காணொளி நாடாப் பதிப்பியை சப்பானில் வெளியிட்டது.
1979 – மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
1981 – பிரான்சுவா மித்தரான் பிரான்சின் முதலாவது சோசலிச அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.
1993 – தாய்லாந்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 – எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் உயிரிழந்தனர்.
1997 – ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த 7.3 Mw அளவு நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
2005 – சியார்சியாவின் திபிலீசி நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் வாக்கர் புஷ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும் அது வெடிக்கவில்லை.
2013 – மேற்கு அரைக்கோளத்தின் முக உயர்ந்த கட்டடம் என்ற பெயரை 1 உலக வர்த்தக மையம் பெற்றது.


பிறப்புகள்


1661 – சகாந்தர் சா, முகலாயப் பேரரசர் (இ. 1713)
1788 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1827)
1838 – ஜான் வில்க்ஸ் பூத், அமெரிக்க நடிகர், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்தவர் (இ. 1865)
1855 – யுக்தேசுவர் கிரி, இந்திய குரு (இ. 1936)
1899 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகை, பாடகர் (இ. 1987)
1900 – சிசிலியா பேய்னே கபோசுச்கின், ஆங்கிலேய-அமெரிக்க வானியலாளர், வானியற்பியலாளர் (இ. 1979)
1918 – டி. பி. தர், காசுமீர அரசியல்வாதி (இ. 1975)
1927 – நயந்தரா சாகல், இந்திய எழுத்தாளர்
1930 – ஜோர்ஜ் ஸ்மித், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1932 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (இ. 2011)
1940 – வேயின் டையர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2015)
1946 – பிருட்டே கால்டிகாசு, செருமானிய ஆய்வாளர்
1949 – இராமசாமி பழனிச்சாமி, மலேசிய அரசியல்வாதி
1951 – நெல்லை சு. முத்து, தமிழக அறிவியலாளர்
1954 – ஏ. கே. லோகிததாஸ்‎, மலையாளத் திரைப்பட இயக்குநர் (இ. 2009)
1963 – ஆ. ராசா தென்னிந்திய அரசியல்வாதி
1981 – நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை


இறப்புகள்


1569 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (பி. 1500)
1829 – தோமசு யங், ஆங்கிலேய மருத்துவர், மொழியியலாளர் (பி. 1773)
1849 – ஒக்குசாய், சப்பானிய ஓவியர் (பி. 1760)
1952 – முகம்மது மாக்கான் மாக்கார், இலங்கை அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1877)
2003 – கோபிகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1945)
2018 – டேவிட் குடால், ஆத்திரேலிய தாவரவியலாளர் (பி. 1914)
2019 – தோப்பில் முகமது மீரான், தமிழக எழுத்தாளர் (பி. 1944)


சிறப்பு நாள்


குழந்தைகள் நாள் (மாலைத்தீவுகள்)
விடுதலை நாள் (உருமேனியா, உதுமானியப் பேரரசிடம் இருந்து, 1877)
அன்னையர் நாள் (எல் சால்வடோர், குவாத்தமாலா, மெக்சிகோ )(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

289 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.