(புதியவன்)
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதையடுத்து, இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் கம்பஹாவில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், வட்டுபிட்டிவல பிரதேசத்தில் மழை வீழ்ச்சியானது 98.5 மீற்றராக பதிவாகியுள்ளதுடன் பலபத்தலவில் 81.5 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் பணிமனை தெரிவித்துள்ளதோடு மேலும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.