மக்கள் முரண்பட்டதால் பதற்றம்!
(ஆதவன்)
சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூரில், பொதுமக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தபோது சம்பூர் பொலிஸார் அங்கு சென்று நீதிமன்ற தடையுத்தரவைக் காண்பித்து தடுக்க முற்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்தோர் பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவைப் பெறுவதற்கு மறுத்ததோடு, வேறு யாரையும் நாம் நினைவுகூரவில்லை, உயிரிழந்த எமது மக்களுக்காகவே இதனைச் செய்கின்றோம் என பொலிஸாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
நீண்டநேர வாக்குவாதத்தின் பின்னர் பொலிஸார் அங்கிருந்துவெளியேறினர். இதேவேளை - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உபசெயலர் நேற்றிரவு சிறிலங்கா பொலிஸாரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.