இனம் தெரியாத நபர்களினால் வாகனத்தின் கண்ணாடிகள் அடித்து உடைத்து தீ வைக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு உடுவில் டச்சு வீதியில் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் இந்த இனச் செயலை செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனம் தீப்பற்றி எரிவதை கண்ட வீட்டின் உரிமையாளர் தனது பிள்ளைகளின் உதவியுடன் குறித்த தீ விபத்தினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்து ள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.