(செல்வன்)
குடிதண்ணீரைப்பெற்றுக் கொள்ளும் கிளிநொச்சி குளம் மாசுபடுவது உறுதியெனில் பொதுநல வழக்கு தொடர வேண்டும் என கூறப்பட்ட நிலையில் மாற்று இடத்தை அடையாளம் காண தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றபோது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மக்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டத்துக்காக இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்துக்கு நீர் பெறப்பட்டு சுத்திகரித்து வழங்கப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி குளத்தில் மருத்துவக்கழிவுகள், இராணுவ முகாம் மற்றும் நகர்ப்புற கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் குடிநீரை சுத்திகரிப்பதில் சிக்கல் காணப்படுவதாக இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் சபையில் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை. தவநாதன் குறிப்பிடுகையில், நீரை சுத்திகரிக்க முடியாமையால் அதிக குளோரின் பாவிக்கப்படுவதை காண்பதாகவும் இது பாரதூரமான விடயம் என்பதால் மாற்று இடம் ஒன்றை அடையாளம் கண்டு அங்கிருந்து நீரை பெற வேண்டும் எனவும், அரசதலைவர் கிளிநொச்சிக்கு வரவுள்ள நிலையில் அத் திட்டத்துக்கான நிதியை பெறுவது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சரையும் அழைத்து கலந்துரையாடுவோம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும், பொதுநல வழக்கு தொடர்பிலும் சிவமோகன் தெரிவித்துள்ள நிலையில், கிளிநொச்சி குளத்தையும் பாதுகாக்காமல் மாசுபட விடவும் விட முடியாது என தெரிவித்த அமைச்சர், சுத்தமான குடிநீரை வழங்கக் கூடிய பகுதியை அடையாளம் கண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.