(ஆதவன்)
சிங்கப்பூரில் நீண்டகாலம் தலைமை அமைச்சராக இருந்த லீசியென் லூங் பதவி துறந்துள்ளார். 20ஆண்டு காலம் தலைமை அமைச்சராக இருந்த அவரின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.
சிங்கப்பூரின் துணை தலைமை அமைச்சரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் நேற்று இரவு லீயிடம் இருந்து முறைப்படி ஆட்சியைப் பொறுப்பேற்றுள்ளார்.
1965ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து சிங்கப்பூரில் மூன்று தலைமை அமைச்சர்கள் மட்டுமே ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆளும் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள். தற்போது லீ சியென் லூங் பதவி விலகியமையானது சிங்கப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிலர் அவர் பதவியில் தொடரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். எனினும், அவர் அமைச்சரவையில் மூத்த உறுப்பினராகச் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.