(ஆதவன்)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதிக்கிளையால் பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் வட் டுக்கோட்டை துணவியில் நாடாளுமன்றமுன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்துநாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் பொதுச் சுடரேற்றப்பட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வட்டுக்கோட்டையின் பல பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்ட மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் - முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியின் வரலாற்றை உள்ளடக்கிய துண்டறிக்கையும் விநியோகிக்கப்பட்டது.
நினைவேந்தலில் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஜெயந்தன், சிறி ஜீவா, மகளிர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி, சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.