(ஆதவன்)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரின் போராட்ட இல்லத்துக்கு முன்பாக இந்தப் போராட் டம் நேற்று இடம்பெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2 ஆயிரத்து 645 ஆவது நாளாகப் போராடி வரும் உறவுகள், இனப்படு கொலைக்கு நீதிகோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரியும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.