(புதியவன்)
பன்னாட்டு ரீதியாக இந்தியாவில் நடைபெற்ற அழகுக்கலை போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிதர்சனா திலக்சன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அழகுக்கலை கற்கைநெறியை கடன் பெற்றே கற்க ஆரம்பித்தேன் என ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், எனக்கு அழகுக்கலையில் ஈடுபாடு இருந்தது. ஆகையால் பாடசாலை கல்வியை முடித்துவிட்டு இந்தியாவிற்கு சென்று அழகுக்கலை டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்தேன்.
குறித்த அழகுக்கலை போட்டியில் இலங்கையைச் சேர்ந்த 9 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். அதன்பின்னர் பல உள்ளூர் அழகுக்கலை போட்டிகளில் கலந்துகொண்டேன். எனக்கு எனது பெற்றோரும் கணவரும் ஊக்கம் கொடுத்தார்கள் என தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.