வரலாற்றில் இன்று – 20.05.2024
வரலாற்றில் இன்று – 20.05.2024

(புதியவன்)

மே 20  கிரிகோரியன் ஆண்டின் 140 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 141 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 225 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

325 – கிறித்தவத் திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச் சங்கம், நிக்கேயா பேரவை அமைக்கப்பட்டது.
1217 – இங்கிலாந்து லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார்.
1497 – ஜான் கபோட் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக மெத்தியூ என்ற கப்பலில் புறப்பட்டார்.
1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.[1]
1521 – பாம்பெலூனா நகரில் இடம்பெற்ற போரில் லொயோலா இஞ்ஞாசி காயமடைந்தார்.
1570 – உலகின் முதலாவது நவீன நிலப்படத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.
1605 – உரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் மதப்பரப்புனராக கோவா வந்து சேர்ந்தார்.
1631 – முப்பதாண்டுப் போர்: செருமனியின் மாக்டபூர்க் நகரை புனித உரோமைப் பேரரசு கைப்பற்றி அந்நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தது.
1802 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளில் அடிமை முறையை மீண்டும் கொண்டுவந்தான்.
1813 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் செருமனியின் சாக்சனி நகரில் நுழைந்து உருசியா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கென்டக்கி மாநிலம் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. செப்டம்பர் 3 இல் கூட்டமைப்புப் படைகள் ஆக்கிரமிக்கும் வரை இந்நிலை நீடித்தது. வட கரொலைனா ஒன்றியத்தில் இருந்து விலகியது.
1869 – யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.[2]
1873 – லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
1875 – அனைத்துலக முறை அலகுகள் முறைமையை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 17 நாடுகள் கையெழுத்திட்டன.
1882 – செருமானியப் பேரரசு, ஆத்திரியா-அங்கேரி, இத்தாலி இராச்சியம் ஆகியன முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
1883 – கிரக்கத்தோவா எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. அடுத்த மூன்று மாதங்களில் 36,000 பேர் உயிரிழந்தனர்.
1891 – திரைப்பட வரலாறு: தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.
1927 – மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசின் ஹெஜாஸ், நாச்து இராச்சியங்கள் மீதான இறைமையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது. இவை பின்னர் சவூதி அரேபியா இராச்சியமானது.
1940 – பெரும் இன அழிப்பு: முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: கிரீட் சண்டை: செருமனியப் படைகள் கிரீட் நகரைக் கைப்பற்றின.
1948 – சீனக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக சங் கை செக் தேர்தெடுக்கப்பட்டார்.
1956 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஐதரசன் குண்டு பசிபிக் பெருங்கடலில் பிக்கினி திட்டில் போடப்பட்டது.
1964 – பிரபஞ்ச நுண்ணலைக் கதிர்வீச்சை இராபெர்ட் உட்ரோ வில்சன் கண்டுபிடித்தார்.
1965 – எகிப்தில் கெய்ரோ நகரில் பாக்கித்தானிய வானூர்தி தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
1971 – பாக்கித்தான் படைகள் சுக்நகர் என்ற இடத்தில் வங்காள இந்துக்களைப் படுகொலை செய்தனர்.
1980 – கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
1983 – எயிட்சு நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி தீ நுண்மங்களைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
1983 – தென்னாப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியாவில் உம்கொன்ரோ வெய் சிசுவே இயக்கத்தினரால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர், 217 பேர் காயமடைந்தனர்.
1985 – வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா கியூபாவுக்கான வானொலி சேவையை ஆரம்பித்தது.
1989 – 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: சீனாவில் இராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
1990 – உருமேனியாவில் கம்யூனிச ஆட்சிக்குப் பின்னர் முதல்தடவையாக அரசுத்தலைவர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
2002 – கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
2012 – வடக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 27 பேர் உயிரிழந்தன்ர்.
2013 – அமெரிக்காவில் ஒக்லகோமா நகரில் வீசிய சுழற்காற்றினால் 24 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.


பிறப்புகள்


1743 – டூசான் லூவர்சூர், எயித்தியப் புரட்சித் தலைவர் (இ. 1803)
1799 – பல்சாக், பிரான்சிய எழுத்தாளர் (இ. 1850)
1825 – ஜார்ஜ் பிலிப்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1865)
1845 – அயோத்தி தாசர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1914)
1851 – யமஹா, டொரகுசு, சப்பானியத் தொழிலதிபர் (இ. 1916)
1860 – எடுவர்டு பூக்னர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1917)
1894 – சந்திரசேகர சரசுவதி, காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது தலைவர் (இ. 1994)
1908 – ஜேம்ஸ் ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகர் (இ. 1997)
1923 – எம். டி. இராமநாதன், இந்திய கருநாடக இசைப்பாடகர் (இ. 1984)
1928 – மகாராஜபுரம் சந்தானம், கருநாடக இசைப் பாடகர் (இ. 1992)
1935 – ஒசே முகிக்கா, உருகுவாயின் 40வது அரசுத்தலைவர்
1938 – காரை சுந்தரம்பிள்ளை, ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2005)
1939 – பாலு மகேந்திரா, இலங்கை-இந்தியத் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் (இ. 2014)
1941 – கோ சொக் டொங், சிங்கப்பூரின் 2-வது பிரதமர்
1950 – சாலா நாத் கனால், நேபாள அரசியல்வாதி, பிரதமர்
1953 – ராம்லி இப்ராஹிம், மலேசிய பரத நாட்டியக் கலைஞர்
1957 – யோஷிஹிகோ நோடா, சப்பானின் 62வது பிரதமர்
1981 – இக்கர் கஸிலஸ் பெர்னாண்டஸ், எசுப்பானியக் காற்பந்து வீரர்


இறப்புகள்


1506 – கொலம்பசு, அமெரிக்காவைக் கண்டுபிடித்த இத்தாலிய கடல் பயணி (பி. 1451)
1766 – மல்கர் ராவ் ஓல்கர், மராட்டியப் பேரரசர் (பி. 1693)
1924 – போகடு கான், மங்கோலியப் பேரரசர்
1947 – பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட், நோபல் பரிசு பெற்ற சிலோவாக்கிய-செருமனிய இயற்பியலாளர் (பி. 1862)
1957 – த. பிரகாசம், சென்னை மாகாண முதல்வர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1872)
1959 – சா. தருமாம்பாள், தமிழக அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் (பி. 1890)
1978 – பி. சா. சுப்பிரமணிய சாத்திரி, தமிழக சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர் (பி. 1890)
2004 – எம். ஏ. குலசீலநாதன், ஈழத்து கருநாடக, மெல்லிசைப் பாடகர் (பி. 1940)
2005 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1943)
2008 – பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பி. 1965)

சிறப்பு நாள்


நினைவு நாள் (கம்போடியா)
விடுதலை நாள் (கிழக்குத் திமோர், இந்தோனேசியாவிடம் இருந்து 2002)(ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

265 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.