பிறந்தநாளில் மறைந்த சோகம்
புதியவன்
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஈருருளியில் பால் எடுத்துச் செல்லும் போது, புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதி யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் பிறந்ததினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.