(புதியவன்)
ஈரான் அரச தலைவர் சையத் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள இரங்கலில்,
அரச தலைவர் இப்ராஹிம் ரைசி, அயலுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பல மூத்த ஈரானிய அதிகாரிகளின் துயர உயிரிழப்பால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் மறைந்த ஈரான் அரச தலைவர் ரைசியின் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும், இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி ஈரான் அரச தலைவர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பலநோக்குத் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.