(மாதவன்)
அனுமதிப் பத்திரத்துக்கு முரணாக மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட சுற்றிவளைப்பின் போது அனுமதி பத்திரத்துக்கு முரணாக வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.