(புதியவன்)
ஈரானிய அரச தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் அயலுறவுத்துறை அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனின் உயிரிழப்பு தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் எக்ஸ்’ தளத்தில் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் அரச தலைவரின் உயிரிழப்புச் செய்தி கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், ஈரானிய அரச தலைவர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அதில் பதிவிட்டிருந்த அவர், அரச தலைவர் ரைசி இலங்கையின் உண்மையான நண்பர் என்றும், ஈரான் மக்களுக்கான அவரது தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படவேண்டியவை என்றும் அதில் மேலும் தெரிவித்திருந்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.