அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் வாதரவத்தை பெரிய பொக்கணை பகுதியில் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கசிப்புடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து 30 லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்ட அதேவேளை தமக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி அசேல தலைமையிலான பொலிஸார் சந்தேகநபரை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட கசிப்புடன் சந்தேக நபரை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.