மலையாள நடிகர் பகத் பாசில் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து தமிழில் மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்து அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றார்.
தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க பகத் பாசிலிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனி ஒருவன் முதல் பாகத்தில் அரவிந்தசாமி வில்லனாக நடித்து இருந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் அரவிந்தசாமி இறந்து விடுவதுபோல் படத்தை முடித்தனர். இதனால் இரண்டாம் பாகத்துக்கு புதிய வில்லனாக பகத் பாசில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் அதற்கு சம்மதிப்பாரா? என்பது விரைவில் தெரியவரும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.