கிளிநொச்சி புதுஐயனார் குளப்பகுதியில் கசிப்புக்காச்சும் குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற பொலிஸ் அலுவலகரைக் காணவில்லை இதையடுத்து அவரைத் தேடும் நடவடிக்கைகள் நேற்றுத் தீவிரப்படுத்தப்பட்டன. புதுஐயனார்குளப் பகுதியில் கசிப்புக் கய்ச்சப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றுக்காலை அந்தப் பகுதிக்கு சென்ற பொலிஸ் அலுவலரே காணாமல் போயுள்ளார்.
மூன்று பொலிஸ் அலுவலகர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு சிலர் கசிப்பு காச்சிக் கொண்டுள்ளனர். அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது சந்தேக நபர்கள் தப்பியோயுள்ளனர். இதையடுத்து நீண்ட தூரம் அவர்களை பொலிஸார் விரட்டிச் சென்ற பின் திட்டமிடப்பட்ட இடத்தில் மீண்டும் இருவரே வந்துள்ளனர். மற்றுமொருவர் திரும்பி வரவில்லை. இதையடுத்தே பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் தகவல் அறிவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்று வருகின்றது. காடுகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாயின் உதவியுடன் நேற்றிரவு வரை தேடுதல் இடம்பெற்று வருகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.