மன்னார் முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப்பகுதியில் ( ஆற்றுவாய் ) உயிரிழந்து பல நாட்கள் ஆகி சிதைவடைந்து எலும்புகள் தெரியும் வண்ணம் உள்ள சடலம் ஒன்று முத்தரிப்புத்துறை மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
கடலுக்குள் வலை பாய்ச்சுவதற்காக சென்ற மீனவர்களே குறித்த உடலை இனங்கண்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிசாருக்கு மீனவர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சிலாவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.