கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சமபவம் கஹவத்த எந்தான மதலகம கொலனி பகுதியில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் தெரியவந்தவை
உயிரிழந்த நபருக்கும், சந்தேகநபரின் மனைவிக்கும் இடையிலான திருமணத்திற்குப் புறம்பான உறவினால் ஏற்பட்ட பிரச்சினையே இந்த கொலைக்கான காரணமென காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன் அதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் எந்தான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நேற்று பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.