(ஆதவன்)
தென் சீனக்கடற்பரப்பில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், தனது கடற்படையை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான முதலாவது நீர்மூழ்கிக் கப்பலைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்புதலை அந்த நாட்டு அரசதலைவர் பேர்டினாண்ட் மார்கோஸ் வழங்கியுள்ளார்.
தென் சீனக்கடற்பரப்பில் சீனா மற்றும் தாய்வான் இடையிலான மோதல் போக்கையடுத்து நாளுக்குநாள் பதற்றம் அதிகரித்துவருகின்றது. அத்துடன் தென் சீனக் கடற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பிலிப்பைன்ஸ் சொந்தம் கொண்டாடிவரும் நிலையில் அதற்கு சீனா கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலும் மோதல் போக்கு நிலவுகின்றது.
ஆனால், சீனக் கடற்படைக்கு நிகரான கடற்படைப்பலமோ அல்லது இராணுவப் பலமோ பிலிப்பைன்ஸிடம் இல்லை. ஆதலால் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைச் சமாளிப்பதற்காக தனது கடற்படையையும் இராணுவத்தையும் நவீனப்படுத்த பிலிப்பைன்ஸ் தீர்மானித்துள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.