ஆதவன்
கிளிநொச்சியில் பல பகுதிகளிலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்காக நால்வருக்கு ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாத காலத்துக்கு சாரதி அனுமதிப்பத் திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, வரிப்பத்திரம், காப்புறுதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்திய நபர் கைது செய்யப் பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவருக்கு 80 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 55 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேருக்குத் தலா 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது சாரதி அனுமதிப்பத்திரங்களும் ஒரு மாத காலத்துக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. (எ )
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.