(புதியவன்)
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க இராஜாங்க பணிமனையின் பிரதிச் செயலாளர் அஃப்ரீன் அக்தரை நேற்று (14) வோஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்க பணிமனையில் சந்தித்தார்.
இந்த கலந்துரையாடலில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி குறித்தும் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றதாக மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய தாராளமான ஆதரவிற்கும் முன்னாள் அரச தலைவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியாளர். செயலாளர் நாயகம் சஜின் வாஸ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கலாநிதி சமில லியனகே ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.