தந்திரங்கள் நிரந்தரமில்லை!
தந்திரங்கள் நிரந்தரமில்லை!

(ஆதவன்)

 

'கொடுங்கோல் அரசன் ஒருவன் அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து 3 மீற்றர் மாத்திரமே பரப்பனான தனிச்சிறையில் அடைக்கும் படி கட்டளையிட்டான். நிரபராதியான குடிமகன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம் பித்தான். நான் நிரபராதி ஏன் என்னைக் செய்தீர்க ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள் T என்று உரக்கக் கதறினான் பின்னர் அவனை ஒரு மீற்றர் மாத்திரமே அளவுள்ள தனிச் சிறையில் அடைக்கும்படி கட்டளை வந்தது. மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் ஆனால் இம்முறை 'நான் நிரபராதி' என்ற வாதத்தை மறந்து விட்டான். இது என்ன கொடுமை? இந்தச் சிறையில் எப்படி இருப்பது? உறங்குவது? அமர்ந்து கொண்டு தானே உறங்க முடியும். இது உங்களுக்கே அநியாயமாகத் தெரியவில்லையா? 'எனக் கதறினான். சினம் கொண்ட அரசன் இன்னும் நான்கு சிறைக்கைதிகளை அவனோடு சேர்த்து அந்தச் சிறிய கூட்டில் அடைத்து விட்டான். இப்போது ஐந்து பேரும் ரும் இணைந்து கூக்குரலிட்டனர். எங்களால் முடியாது. நாங்கள் மூச்சுத் திணறிச் செத்து விடுவோம். உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா? எனப் புலம்பினார்கள். மேலும் சினம் கொண்ட ஒரு பன்றியை அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான் விரக்தியடைந்த அவர்கள், "நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது? தயவு செய்து இந்தப் பன்றியை மாத் திரமாவது வெளியே எடுத்து விடுங்கள்" எனக் கெஞ்சிக் கேட்டனர். தயவு காட்டிய சிறைக்காவலர் பன்றியை வெளியே எடுத்தான். அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து இப்போது உங்கள் நிலை எப்படி ? என்று கேட்டான். 'நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம். எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது' என்று பதில் கூறினார்கள்.

 

இப்படித்தான் 'பன்றிமையக் கோட்பாடு' நடை முறைப்படுத்தப்படுகின்றது. 'பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும்' என்ற கோரிக்கைக்கு எம்மைத் தள்ளி விடுகிறார்கள். அதற்கு முன்னால் இருந்த விவகாரம் அதற்கும் முன்னால் இருந்த மூல விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப்படுகிறது.

 

இலங்கையில் அதுவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் படுகில்லாடி ஒவ்வொரு விடயத்தையும் மறக்கச் செய்வதற்காக புதுப்புது விடயங்களை கட்டவிழ்த்து விடுவதிலும், ஒரு விடயத்தின் மூலக்கோரிக்கையை நீர்த்துப்போகச் செய்வதிலும் வல்லவராக வலம் வருகிறார்.

 

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டபோது அதற்குப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன் அந்தச் சட்டம் நிறை வேற்றப்படக் கூடாது என்றனர். அந்தச் சட்டத்தை இலங்கை அரசமைப்பில் உள்வாங்கத் தேவையில்லை என்று போர்க்கொடி தூக்கினர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அவரது அரசாங்கமோ அது பற்றி அலட்டிக்கொள்ளாமல் தன்னிச்சையாக அந்தச்சட்டத்தை நிறைவேற்றியது. இதன்போது சட்டத்தை நிறைவேற்றிய முறைமை தவறு, உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என்று சட்டத்தை வேண்டாம் என்று யார் கோரினார்களோ அவர்களே சட்டம் சரியான முறைமையில் நிறைவேற்றப்படவில்லை என போர்க்கொடி உயர்த்தினர்.

 

இப்போது அந்தச் சட்டம் தொடர்பில் சொல்லப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்குவதாக அரசாங்கம் அறிவித்துவிட்டது. அமைச்சரவையும் அதற்கு அனுமதி கொடுத்து விட்டது. சட்டத்தை வேண்டாம் என்றவர்களை, இறுதியில் சட்டத்தைத் திருத்தினால் சரி என்று சொல்ல வைத்து, அவர்கள் சொன்னதைப்போன்று சட்டத்தையும் அரசாங்கம் திருத்திவிட்டது. எந்தச் சட்டம் வேண்டாம். என்று சொன்னார்களோ அவர்களே இப்போது சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைமையை ஜனாதிபதி ரணில் உருவாக்கியிருக்கின்றார். இப்படி எப்போதுமே ஒரு சிறிய கோட்டுக்குப் பக்கத்தில் புதிய பெரிய கோடுகளை வரைந்து சிறிய கோடுகளை மறக்கடிக்கும் தந்திரத்தை ரணில் விடாது தொடர்கிறார். ஆனால் எப்போதுமே பன்றிமையக் கோட்பாடும். சிறியகோடு - பெரிய கோடு தந்திரமும் நிலைத்திருப்பதில்லை. அவை என்றோ ஒருநாள் ரணிலைக் கைவிடும்போது கோத்தாபயவை விடவும் அவர் பரிதாபத்துக்குரியவராக, நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவராக மாறி நிற்பார். (ஏ)

 

(15.02.2024 உதயன் பத்திரிகை)

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

394 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.