ஆதவன்.
இலங்கையையும், இந்தியாவையும் பிரிக்கும் கடற்பரப்பான பாக்கு நீரிணையை 13 வயதிலேயே நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளார் ஹரிஹரன் தன்வந்த். யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும், திருகோணமலை கோணேஸ்வர இந்துக்கல்லூரி மாணவனுமான ஹரிஹரன் தன்வந்த் நேற்று அதிகாலை இந்தியாவின் தனுஷ்கோடியில் இருந்து தனது சாதனை நீச்சல் பயணத்தை ஆரம்பித்து, நேற்று மதியம் தலைமன்னாரை வந்தடைந்தார்.
யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூல் ஜெனரல் சாய் முரளி, தலைமன்னாரில் கரையேறிய ஹரிகரன் தன்வந்தை நேரில் சந்தித்து, பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.
பாக்குநீரிணையை நீந்திக் கடந்த ஹரிஹரன் தன்வந்துக்கு பாடசாலைச் சமூகத்தினர், பொது அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமானோர் தலைமன்னார்க் கடற்கரையில் பாராட்டி வாழ்த்தினர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.