ஆதவன்.
கிளிநொச்சி, பூநகரிப் பகுதிகளில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் பூநகரிப் பிரதேசத்தின் பல கிராமங்கள் உவரடையும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளன, என்று அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தாவது:-
பூநகரி, முக்கொம்பன் கிராமத்தில் சிலர் காடுகளை அழித்து காணி களை அடாத்தாகப் பிடித்துவரு கின்றனர். முக்கொம்பன் கமக்கார அமைப் பில் பொறுப்பிலுள்ளவர்களே காடுகளை அழிப்பதற்கு உடந்தையாக உள்ளனர் என்று தெரிவிக் கப்படுகிறது. பூநகரிப் பிரதேசத்தில் முக்கொம்பன், கரியாலைநாகபடுவான். ஜெயபுரம் போன்ற இடங்களிலேயே காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுகின்றன. இந்தக்காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதே பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானமாகவுள்ளது.அவற்றைப் பாதுகாப்பதன் மூலமே பூநகரி கிராமங்களை உவர்ப்பரம்பலிலிருந்து பாதுகாப்பதற்கு வழிவகுக்கும். எனவே இது தொடர்பில் பூநகரி பிரதேச செயலர் கவனம் செலுத்தவேண் டும்- என்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.