(புதியவன்)
ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (23) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தியத்தலாவை மருத்துவமனையின் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.