(புதியவன்)
அஸ்வசுமா இரண்டாம் கட்ட விண்ணப்ப ஆய்வு பயிற்சியாளர் திட்டத்தின் பயிற்சி – நுவரெலியா மாவட்டம் நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுடன் இணைந்த நலன்புரி நன்மை வாரியத்தினால் அமுல்படுத்தப்படும் அஸ்வசும இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தின் பயனாளிகளை தெரிவு செய்வதற்கான பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி (27.03.2024) அன்று நுவரெலியா மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இறுதிச் சுற்றுக்கான இரண்டாம் கட்ட விண்ணப்பங்களுக்கான அழைப்பு 24 மார்ச் 2024 அன்று முடிவடைந்தது. விண்ணப்பங்கள் கிராம அலுவலர் கள ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டு, தகுதியானவர்களை தேர்வு செய்வது, தகவல் அமைப்பில் உள்ள பணிகள் குறித்து பயிற்சியாளர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்பட்டது.
நுவரெலியா மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி எஸ்.பி.கே.போதிமான்ன, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் சமூக பாதுகாப்பு நிபுணர் திரு. உபுல் பிராமணகே, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தகவல் தொழில்நுட்பத் தலைவர் திருமதி விஷ்மி சிவலிங்கம். சமூக நலச்சபை உதவி ஆணையாளர் திருமதி ஹிருணி ஆராச்சி, பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், அனைத்து ஊழியர் உத்தியோகத்தர்கள், பிராந்திய WBIU உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.