இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று பதில் துணைத்தூதுவர் ராம் மகேஸ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் பதில் துணைத்தூதுவர் ராம் மகேஸ், இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைக்க தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரை பதில் துணைத்தூதுவரால் வாசிக்கப்பட்டது.