கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (22) இதுவரை 309 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை மீன் சந்தை தொடர்பால் 182 பேருக்கும் மினுவாங்கொடை தொடர்பு காரணமாக பல்வேறு இடங்களில் 75 பேர், தனிமைப்படுத்தல் மையத்தில் இருவர் என 77 பேருக்கு இவ்வாறு தொற்று உறுதியானது.
இதன்படி மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,817 ஆக உயர்ந்துள்ளது.