கொழும்பு – தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெஹிவளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன்சந்தை வளாகத்தில் இருந்து தெஹிவளை மத்திய சந்தைப் பகுதிக்கு மீன்களை ஏற்றிவந்த லொறியின் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான குறித்த நபர் தெஹிவளை மத்திய சந்தைக் கட்டடத் தொகுதியில் மீன் விநியோக நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.