நாய் வீதிக்கு குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய தந்தையும் 5 வயதுடைய மகளும் படுகாயமடைந்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலிப் பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டத்தரிப்பில் நடைபெற்ற தங்கையின் திருமண நிகழ்விற்கு சென்று கொண்டிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.