மருதங்கேணி கொரோனா சிகிச்சை வைத்தியசாலையில் கொரோனா தொற்று நோயாளிகள் 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (19) காலை, மருதங்கேணி கொரோனா வைத்தியசாலை, உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நேற்று இரவு 10.30 மணியளவில், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 21 பேர் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்கள்.