குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்து யக்கல பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாயை கப்பமாக பெற தயாரான பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண் இது குறித்து கம்ஹா குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர்கள் மல்வதுபிரிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.