எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் நேற்று உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கெக்கிராவ அவுக்கணைப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஓட்டோச் சாரதி. இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமாவார்.
குறித்த நபர் அநுராதபுரம்- கெக்கிராவ – இபலோகம ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் பெறக்காத்திருந்தபோதே உயிரிழந்தார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.