பயிரிடப்படாத அனைத்து வயல்களையும் விவசாய நிலங்களையும் பயிரிடுவதை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்கான "ஒரு கைப்பிடிக்கு ஒரு விவசாய நிலம்" தேசிய திட்டம் இன்று ஆரம்பமாகிறது.
இன்று பொல்கஹவெல - ஹொதெல்லவில் உள்ள ஜயசுந்தராராம விகாரைக்கு முன்பாக தொடங்குகிறது.
இந்த ஆரம்ப நிகழ்வு விவசாயம் மற்றும் கால்நடைத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தலைமையில் நடைபெறுகிறது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் 566 கமநல சேவைப் பகுதிகளில் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உணவு கையிருப்புகளைப் பராமரித்தல், உள்நாட்டு உணவு நுகர்வு மற்றும் விவசாய பயிர் ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு 23 ஆம் திகதி வரை தெளிவுபடுத்தப்படும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.