(செல்வன்)
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரோ பிரஞ்ச் இன்று முல்லைத்தீவுக்கு பயணம் செய்திருந்தார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு சென்று மாவட்டச் செயலர் உமா மகேஸ்வரனுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தித் தேவைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர், மேலதிக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி அலுவலகர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.