(புதியவன்)
முல்லைத்தீவு - பூதன் வயல் கிராமத்தில் 23 வயது இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பூதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை வவுனியா ஆசிக்குளத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் திருமணம் செய்துள்ளார். 7 மாதங்களாக இருவரும் பூதன்வயல் கிராமத்தில் வாழ்ந்து வந்தனர்.
தனது மனைவி வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துவிட்டாரென முறைப்பாடு செய்வதற்கு கணவன் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். பொலிஸார் வீட்டுக்கு வருவதற்கிடையில், அயலவர்கள் கிணற்றிலிருந்து பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் பெண்ணின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். கணவருடன் வாழ்ந்து வந்த நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் சந்தேகத்தில் கைதானார். இவர்கள் இருவரையும் விட மேலும் ஒரு பெண்ணையும் முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். (அ-ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.