புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் பல பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில் இன்றையதினம்(11) பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி மற்றும் மயக்கம் போன்ற நோயால் மருத்துவமனையில் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதித்த போது மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற குறித்த மாணவி உடல்நலக் குறைவால் பாடசாலையில் இருந்து காலை பெற்றோரிடம் பாடசாலை நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை மருத்துவமனைக்கு சேர்க்க வேண்டிய தேவை காணப்பட்டதுடன் மாஞ்சோலை மருத்துவமனைக்கு புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்வதற்கு அம்பிலன்ஸ் தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
இதன்பின் சுமார் 3மணிநேரத்தின் பின் மாணவியும் தந்தை மருத்துவமனை மருத்துவரிடம் சென்று தாம் காத்திருப்பதற்கான காரணத்தை கேட்ட போது மருத்துவர் மருத்துவமனையில் அம்பிலன்ஸ் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதற்கு அவர் தன் சொந்த செலவில் அம்புலன்ஸ் விட வேண்டும் என மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.
இதன் பின் மாணவியும் தந்தை தனது சொந்த விருப்பின் பெயரில் மருத்துவமனையில் இருந்து மாணவியை மாஞ்சோலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதேவேளை, மாஞ்சோலை மருத்துவமனையில் பல அம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.