தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாமையால் அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியிலிருக்கின்றனர்.
கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தவிர இந்த அரசாங்கம் வேறு எதனையும் செய்யவில்லை.
எனவே அதனை ஏற்றுக்கொண்டு அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் பொருட்களின் விலைகள் என அனைத்தையும் குறைப்பதாக தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டது.
ஆனால் அவை தற்போது வரை நிறைவேற்றப்படாமையால் மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியிலிருக்கின்றனர். மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தவிர இந்த அரசாங்கம் வேறு எதனையும் செய்யவில்லை என்றார்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.