புதியவன்.
கிளிநொச்சி மாவட்ட செயலர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் சேவையிலிருந்து நாளை 13ம் திகதி செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறவுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் 1984 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனி மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் குறித்த மாவட்டத்திலிருந்து அரச நிர்வாக சேவைக்கு தெரிவான முதலாவது நிர்வாக சேவை அதிகாரி இவரென்பது சிறப்பம்சமாகும்.
இலங்கை அரச நிர்வாக சேவையில் இவர் தொடர்ச்சியாக 32 வருடங்கள் கடமையை நிறைவேற்றியதுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது பெண் மாவட்ட செயலராகவும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையில் முன்னோக்கிப் பயணிக்கத் துடிக்கும் பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இவர் பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து துணிச்சல் மிக்க பெண்ணாகவும் பயணித்து மணிவிழா காணும் திருமதி. றூபவதி கேதீஸ்வரனின் பணிகளையும், சேவைகளையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இவரது சேவையை பாராட்டி மதிப்பளிக்கும் ஏற்பாடுகள் நாளை செவ்வாய்க்கிழமை(13) கிளிநொச்சி கூட்டுறவுசபை மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.