சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
41 வயதான அசங்க மேத்யூ பொடியப்புஹாமிலகே, ஒரு மொழிபெயர்ப்பாளருடனும் இரண்டு ஆதரவாளர்களுடனும் மெல்போர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் மற்றொரு பயணி அளித்த புகாரைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 18ஆம் திகதி மெல்போர்ன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பொடியப்புஹாமிலகே விமானப் பயணத்தின் போது அநாகரீகமான செயலைச் செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
சம்பவம் நடந்த மறுநாளே அவர் முதலில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவருக்கு கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டிருந்தது.
அவரது கடவுச்சீட்டை ஒப்படைத்தல், மாநிலத்திற்குள் தங்குதல், வாரத்திற்கு மூன்று முறை பொலிஸாரிடம் அறிக்கைச் செய்தல் மற்றும் வீட்டு ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றுதல் ஆகியவை இதில் அடங்கும்.
நீதிமன்றத்தில், அவரது சட்டத்தரணி, க்ளென் வேவர்லியில் தனியாக வாழ அனுமதிக்க அவரது பிணை நிபந்தனைகளில் மாற்றம் கோரினார்.
ஜனவரி 30 ஆம் திகதிக்குள் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை அவரது வாதத்திற்கு பொலிஸார் வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பயணிகளும் பறக்கும் போது பாதுகாப்பாக உணர உரிமை உண்டு என்றும், அவுஸ்திரேலிய சட்டம் விமானங்களிலும் விமான நிலையங்களிலும் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றும் அந்நாட்டு கூட்டாட்சி காவல்துறை அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.
பொருத்தமற்ற நடத்தைக்கு அவுஸ்திரேலிய கூட்டாச்சி பொலிஸார் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளனர்.
சர்வதேச விமானத்தில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், அவரது நீதிமன்ற வழக்கு நடந்து
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.