முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்கு வெறும் மூன்று வாரங்களில் தீர்வு வழங்கப்படும் என்று வடமாகாண பிரதிப் பிரதமசெயலாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதில், வவுனியா மாவட்டத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, வடமாகாண பிரதிப் பிரதமசெயலாளர் திருமதி அன்ரன் யோகநாயகம் தெரிவித்ததாவது:
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். மிக விரைவில் ஆசிரிய சங்கங்களுடனும் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்கு ஒரு காத்திரமான முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பிலும் தீர்மானங்களை மேற்கொண்டு, அனைத்து மாவட்டங்களும் பயன்பெறக்கூடிய வகையில் ஓர் இடமாற்றக் கொள்கையை வகுத்து அதற்கான அனுமதியைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவோம். பிரதம செயலாளரின் தலைமையில் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மூன்று மாதங்களில் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைப்போம் - என்றார். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.