இங்கிலாந்தில் ஈடிணையற்ற புகழ் சேர்க்கும் ஈழத்து மைந்தன் கப்டன் நவா ரமணன்.
இங்கிலாந்தில் ஈடிணையற்ற புகழ் சேர்க்கும் ஈழத்து மைந்தன் கப்டன் நவா ரமணன்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. நவா ரமணன்
இங்கிலாந்தின் அரச மற்றும் இராணுவத் துறைகளில் திறம்படப் பணியாற்றி அவர் சார்ந்த
துறையினரின் கௌரவத்தையும் பாராட்டையும் பெற்றிருப்பதுடன் தாம் பிறந்த ஈழ
நாட்டுக்கும் புகழ் சேர்த்திருக்கிறார்.


தற்போது இங்கிலாந்தில் கப்டன் நவா ரமணன் என எல்லோராலும் அன்பாக
அழைக்கப்படும் இவர் அந்நாட்டின் நீதி அமைச்சுடன் இணைந்த பல்வேறு
வலையமைப்புகளின் பதில் இயக்குனராகப் பணியாற்றி வருவதுடன் மூத்த அரச
பணியாளர்களில் ஒருவராகவும் விளங்குகின்றார்.
தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சுமார் 1100 ஸ்தாபனங்களின் மூலோபாயங்களை
வகுத்து நடைமுறைப்படுத்துபவராகவும் இவர் பணியாற்றுகின்றார்.சுருங்கச்
சொல்வதானால் நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், தலைமை அலுவலகங்கள்
போன்றவற்றைக் குறிப்பிடலாம்.தவிர,கணனித் தாக்குதல்களிலிருந்து அரச
அமைப்புகளைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலும் இவர் தம்மை ஈடுபடுத்தியுள்ளார்.
யாழ். வட்டுக்கோட்டை தவாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. கந்தையா நவரத்தினம்
( ஏல விற்பனை ஆணையாளர்) மற்றும் சித்தன்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட
திருமதி. சிவனேஸ்வரி ஆகியோரின் மகனாக 1984இல் பிறந்த இவர் தமது ஆரம்பக் கல்வியை
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பெற்றுக்கொண்டார் (1990-1995). பின்னர்
தமது இடைநிலைக் கல்வியை (1996-2003) பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் கற்றுக்
கொண்டிருந்த காலப் பகுதியில் கல்லூரியின் கிரிக்கட் மற்றும் ஹாக்கி அணிகளில்
இணைந்து விளையாடியிருப்பதுடன் சென் ஜோன்ஸ் வாகன அணியிலும்
 தம்மை இணைத்துக்கொண்டு தொண்டாற்றியிருக்கிறார். இவற்றைத் தவிர
கல்லூரியின் சாரணர் குழுவிலும் இவர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கப்டன் நவா ரமணன் அவர்கள் சிங்கப்பூர் இன்போமேஷன் இல் இணைந்து தமது
பட்டதாரிக்கல்வியை மேற்கொண்டிருந்ததுடன் இறுதி ஆண்டுக் கல்வியை Pபி ஐ பி ஐ
யினூடாகப் பூர்த்தி செய்தார்.

இதன் பின்னர் தமது முதுமானிக் கல்வியை இங்கிலாந்தில் கற்று நிறைவு
செய்தார்.இவர் ஒரு சிறந்த கல்விமான் மட்டுமன்றி 19 தொழில் சார் கற்கை நெறிகளையும்
கற்றுப் பூர்த்தி செய்து கல்வி உலகில் தமக்கென ஒரு தனி இடத்தையும்
கைப்பற்றியுள்ளார், இவர் தோற்றிய பரீட்சைகளில் சில கடுமையான போட்டிப்
பரீட்சைகளாக  நடத்தப்பட்டவை என்பதும் இங்கே சுட்டிக் காட்டப்பட
வேண்டியதொன்றாகும்.

நவா ரமணன் தமது 17 ஆவது வயதிலேயே லங்கா சேர்வர் எனப்படும் வலையமைப்பு
முனையம் ஒன்றை உருவாக்கியிருந்தார். இவ்வமைப்பு புதிய
வலையமைப்புகளை உருவாக்குதல் மற்றும் அவற்றுக்கான சேவைகளை வழங்குதல்
போன்ற துறைகளில் தன்னை ஈடுபடுத்தியிருந்தது.
இலங்கையில் 2004 ஆம் ஆண்டில் வலையமைப்புத் தொடர்பான பணிகளில்
ஈடுபட்டிருந்த மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக இந் நிறுவனம் இருந்துள்ளமை
பெருமையுடன்
சுட்டிக் காட்டப்பட வேண்டியதொன்றாகும். இந்தத் துறையில் கப்டன் ரமணனுக்கு
இருந்த பேரார்வம் அவருடன் ஒட்டிப் பிறந்ததொன்றாகும்.
தொழில் துறைகளில் அவர் பெற்றுக்கொண்ட உறுப்புரிமைகளும் அவற்றினூடக தாம்
பெற்றுக்கொண்ட அறிவை அந்தந்த தொழில் சார் துறைகளுக்கே பயன்படுத்தியமையும்
அவரது தொழில்சார் பணிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
கப்டன் ரமணன் தேசிய பாதுகாப்பு அமைப்பின் கௌரவ
உறுப்பினராவார். அத்துடன் பிரிட்டிஸ் கொம்பியூட்டர் சொசைடியும் இவரை தமதுகௌரவ
உறுப்பினர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டமையும் பலராலும் பாராட்டப்பட்ட
விடயமாகும். இந் நிறுவனம் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஒரு பட்டய
நிறுவனமாகும்.

மேலும் கப்டன் ரமணன் 5 ஆண்டுகள் பிரிட்டிஷ் அரச திணைக்களங்கள்
பலவற்றின் தலமை தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றியிருந்தார்.
அத்துடன் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்
ஆகியவற்றுக்கான பொறுப்பும் இவருக்கே வழங்கப்பட்டிருந்தது.
இது இவ்வாறிருக்க, கப்டன் ரமணன் தமது பதவிக் காலத்தில் மக்களுக்கே முதலிடம்
என்பதையே தமது தாரக மந்திரமாகக் கொண்டிருந்தார்.அதனால் திறமையானவர்களை
உருவாக்குவதிலும் அவர்களை வளர்த்தெடுப்பதிலும் தமது முழுக் கவனத்தையும்
செலுத்தியது மட்டுமன்றி இந்த இலட்சியத்தில் பாரிய வெற்றியையும் தமதாக்கிக்
கொண்டுள்ளார்.


கடந்த ஆண்டு எண்முறை மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக தென் கொரியாவில் இடம்பெற்ற எண்முறை பொருண்மிய மன்றில் கலந்து தாம் புகுந்த நாட்டின் அரசுக்கு
புகழீட்டிக் கொடுத்தது மட்டுமன்றி தாம் பிறந்த  வட்டுக்கோட்டை மண்ணுக்கும் பெருமை
சேர்த்து மண்ணின் மைந்தனாக உயர்ந்து நிற்கிறார்.

இவர் தமது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் தாம் புகுந்த நாட்டுக்காகச் செலவிட
வேண்டும் என்ற தியாக சிந்தை கொண்டவர். இதன் காரணமாக பிரிட்டிஷ்
இராணுவத்தில் மேஜராகப் பணியாற்றிய தமது பெரியப்பாவின் அடிச்சுவட்டைப்
பின்பற்றி தாமும் அதே இராணுவத்தில் இணைந்து அதிகாரியாகப்
பணியாற்றியிருக்கின்றார்.தாம் அவ்வாறு பணியாற்றிய காலத்தில் பாதுகாப்புத் துறைக்கு
வேண்டிய தொடர்பாடல் தகவல்கள் பற்றிய நிபுணத்துவ ஆலோசகராக இருந்ததுடன்
அந்தத் துறை பெற்ற வெற்றிகளின் நாயகனாகவும் இருந்திருக்கிறார் எனக் கூறின் அது
மிகையாகாது.


அது மட்டுமன்றி த ரோயல் மிலிற்டி அக்கடமி இல் இணைந்து பயிற்சி
பெற்றதுடன் பிரிட்டிஷ் இராணுவத்தில் கப்டன் தர பதவி நிலைக்கும் உயர்த்தப்பட்டு
அந்த பதவியில் திறம்படப் பணியாற்றி அதே இராணுவத்தில் பணியாற்றிய ஏனைய
அதிகாரிகளுக்கு ஓர் உதாரண புருஷராக வலம் வந்திருக்கிறார்.
2018 இல் நரம்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு
உதவுவதற்காக சில்ட் ஸ்பார்க் என அழைக்கப்படும் ஒரு தொண்டு நிறுவனத்தை, 4 இணை
அமைப்பாளர்களில் ஒருவராக செயற்பட்டு வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார். அது
மட்டுமா? அந்த நிறுவனத்தை திறம்பட இயக்குவதற்கான நிதி சேகரிப்பு வைபவங்களிலும்
தவறாது கலந்து சிறப்பித்து வருகிறார்.பிரிட்டனில் வாழும் சிறிலங்கா சமூகத்தினர்
மத்தியில் சில்ட் ஸ்பார்க் பாரிய செல்வாக்கைப் பெற்றுள்ளது.

இறுதியாக, கப்டன் ரமணன் தூர நோக்கு, அர்ப்பணிப்பு, கௌரவம் போன்ற
நற்பண்புகளைத் தம்மகத்தே கொண்ட நற்குண சீலராவார்.அவர் தமக்காக மட்டும் வாழும்,
ஒரு சுயநலப் பிறவி அல்லர். தமது குடும்பம், சமூகம், நாடு பற்றியும் அவற்றின்
முன்னேற்றம் பற்றியும் சதா சிந்திக்கும் மனித நேயம் மிக்க பண்பாளர் மட்டுமன்றி
எப்படியும் வாழலாம் என்றில்லாது இப்படித்தான் வாழ வேண்டும் என எடுத்துக்காட்டி
வாழும்  ஒரு மாமனிதராகவும் பிரகாசிக்கிறார்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக தமது நண்பர்கள் தேர்ந்தெடுத்துள்ள துறைகளை எவ்வாறு
வெற்றிநடை போட வைக்கலாம் என்பதற்கான தந்திரோபாயங்களை வகுத்துக் கொடுத்து
அவர்களின் கனவுகளை நனவாக்குவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறெல்லாம் உழைத்து தாம் புகுந்த நாட்டுக்கும் பிறந்த நாட்டுக்கும் ஓர்
கலங்கரைவிளக்கமாக, விடிவெள்ளியாக விளங்கும் கப்டன் நவா ரமணனின் புகழ் தமிழ்
கூறும் நல்லுலகெங்கும் சுடர் விட்டுப் பிரகாசிக்க வேண்டுமென நாமும் வாழ்த்தி

 

2691 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.