முல்லைத்தீவு மாவட்டப் பொதுமருத்துவமனையில் இந்தியாவின் உதவியுடன் நான்கு மாடி நோயாளர் விடுதி வளாகத்தைக் கட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஒப்பந்தம் இந்தியாவுடன் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்டப் பொது மருத்துவமனையில் தற்போது முறையான ஆண் மற்றும் பெண் நோயாளர் விடுதிகள் இன்மையால் கட்டில்கள் நிரம்பி வழிகின்றன. பாய் விரித்துப்படுத் திருந்து நோயாளர்கள் மருத்து வம்பெறும் அவலநிலை காணப்
படுகிறது. ஏனைய மாவட்டங்க ளைப் போன்று எமது மாவட்ட மருத்துவமனையில் நோயா ளர் மருத்துவ விடுதிகளுக்கு முன்னுரிமையளித்து கட்டித்தர வேண்டும் என்று சுட்டிக்காட்டி னார் .
அதற்குப் பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர்.
முல்லைத்தீவு மாவட்டப் பொது மருத்துவமனையில் இந்தியா வின் உதவியுடன் நான்கு மாடி
மருத்துவ விடுதி வளாகத்தைக் கட்டவெனத் தீர்மானிக்கப்பட்டுள் ளது. திட்டமுன்மொழிவை செயற் படுத்தத் தேவையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.எதிர்காலத் தில்தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள் ளது. அதன்படி குறிப்பாக முல் லைத்தீவு மாவட்டத்துக்குத் தேவை யான விடுதி வளாகங்களைக் கட் டுவதற்கு முன்னுரிமை அளிக்கப் படும் என்றார்.(ச
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.