ஆபிரிக்க கரையோரப் பகுதியான Mayotte இல் ஏற்ப்பட்டுள்ள பாரிய chido சூறாவளி தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் இந்திப் பெருங்கடல் தீவுக்கூட்டமான Mayotte பிரான்சிற்கு சொந்தமானதாக கருதப்பட்ட போதிலும் குறித்த பகுதி மிகவும் வறுமைக்குரிய இடங்களில் ஒன்றாக உள்ளது.
சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. எண்ணிக்கையை கணக்கிடுவதில் சிரமங்கள் உள்ளதாக பிரான்ஸ் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு சூறாவளி தாக்கம் ஆரம்பமானது. chido சூறாவளியினால் மணித்தியாலத்திற்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.