(புதியவன்)
இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாவிகளுக்கு டிஜிட்டல் முறையில் யு.பி.ஐ மூலம் கியூ ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை நிகழ்நிலை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுறவு சங்கம் (என்.பீ.சீ.ஐ சர்வதேச கொடுப்பனவு லிமிடெட்) மற்றும் இலங்கையில் லங்கா பே பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் 10 ஆயிரம் வணிக நிறுவனங்கள் தம்மை இந்த முறையில் பதிவு செய்துள்ளன.
மேலும் இந்திய சுற்றுலாவிகளின் தடையற்ற கொடுப்பனவு வசதிகளுக்காக 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கையை 65 ஆயிரம் வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.