இலங்கை – தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்த “நீறு பூத்த நெருப்பு” திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று புதன்கிழமை 15ஆம் திகதி இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனம் – தரங்கணி சினிமா திரை அரங்கில் நடைபெற உள்ளது.
யாழ். மண்ணில் பெரும் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை சர்வதேச விருது பெற்ற இலங்கை இயக்குநர் தேவிந்த கோங்காகே அவர்கள் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அவர் எழுதிய “போய் வாரேன் உயிரே” என்ற பாடலை ஜீ தமிழ் டைட்டில் வின்னர் கில்மிஷா பாடியுள்ளார். இந்த பாடல் அவர் தமிழ் திரைப்படத்தில் பாடிய முதல் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.