(ஆதவன்)
இறுதிப்போரின் போது பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். புலிகள் உட்பட 7 ஆயிரத்து 721 பேரே உயிரிழந்துள்ளனர் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வீரசேகர மேலும் தெரிவித்ததாவது:-
"போரின் போது பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர் என்று சிலர் கூறுகின்றனர். 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்று தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 7 ஆயிரத்து 721 பேரே உயிரிழந்தனர் என்று ஐ.நா. அறிக்கையாளர் கூறியுள்ளார். இதில் புலிகளும் உள்ளடங்குகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போர்சார் அதிகாரிகளும் புலிகள் உட்பட 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோரே உயிரிழந்துள்ளனர் எனக் கூறியுள்ளனர். எனவே, பெருமளவானோர் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும்.
புலிகள் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். கொலை செய்தனர். இதன்போது தமிழ் அரசியல்வாதிகள் எங்கிருந்தனர்? அதேவேளை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆபத்தானது, அதன் பின்னணியில் சூழ்ச்சி உள்ளது" - என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.